இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

amuthabharathy haiku

படம்
2005ஆம் ஆண்டு மே மாத இறுதியில் சென்னை தியாகராய நகர் (தி.நகர்) அஞ்சலகத்தின் எதிரே உள்ள மாடியில் ஏறுகிறேன்  22 படிகளைத் தாண்டி வலது புறத்தில் உள்ள மூன்றாவது அறையின் வாயிலில் நின்று "உள்ளே வரலாமா?" என்று அனுமதி கேட்கிறேன்.  "வாங்க! வாங்க!" என்று ஒரு கனிவான குரல். "ஐயா வணக்கம் என் பெயர் கன்னிக்கோவில் இராஜா நான் தொப்புள்_கொடி என்கிற ஹைக்கூ நூலை வெளியிட உள்ளேன். அந்த நூலை நீங்கள் தான் வெளியிட்டு சிறப்பு செய்ய வேண்டும்" என்றேன்.  "நிச்சயமா வரேன்" என்று சொன்னவர், தமிழ்நாட்டின் விருந்தோம்பலான வாசல் வரை வந்து வழியனுப்பியும் வைத்தார்  வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பாக்கி தந்தார் அன்று தொடர்ந்த நட்பு 20 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது # ஓவியக்கவிஞர் #அமுதபாரதி Amudha Bharathy  ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். படத்தில் இடமிருந்து வலமாக: கன்னிக்கோவில் இராஜா, ஓவியக்கவிஞர் அமுதபாரதி, கவிஞர் செல்லம்மா கண்ணன் நாள்: 25.07.2005 தேவநேயப் பாவாணர் நூலகம், அண்ணா சாலை, சென்னை600002.

Tamil Haiku

படம்
கன்னிக்கோவில் இராஜாவின் ஹைக்கூ தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி ஆங்கில மொழிபெயர்ப்புகளில்... நன்றி முனைவர் ம.ரமேஷ் Tamil Haiku in Universal Languages  (தமிழ் ஹைக்கூ பன்மொழிக் குழுமம்)

little princess

படம்
# குட்டி_இளவரசி_புன்னகை கன்னிக்கோவில்_முதல்_தெருவில் புதிய உறுப்பினராக வந்திருக்கிறாள் குட்டி பாப்பா #ரோஸ் இன்று ராதை வேடம் அணிந்துவந்து என்னிடம் "எப்படி இருக்கு மாமா?" என்று கேட்டாள். "ரொம்ப அழகா இருக்க" என்றேன். பதிலுக்கு எதையுமே ஈடு கொடுக்க முடியாத அவள் புன்னகையை பரிசளித்தாள். அந்தப் புன்னகை இளவரசிக்கு கவிஞர் நெல்லை_அன்புடன்_ஆனந்தி எழுதிய இசைப்பட_வாழ்வோம்_வா திருக்குறள் சார்ந்த சிறார் பாடல் நூலைப் பரிசளித்து மகிழ்ந்தேன் அந்த மகிழ்ச்சி குட்டி இளவரசிக்கும் பரவி இருக்கிறது. ஒளிப்படங்கள்: யாழினி Nellai Anbudan Ananthi #childrensbooks #lollipopchildrensworld #kannikovilraja

books for Childrens

படம்
புக் ஃபார் சில்ரன் பதிப்பகம் பதிப்பித்த கன்னிக்கோவில் இராஜா வின்  சிறுவர் கதை நூல்கள் இணைய வழியில் பெற:  https://thamizhbooks.com/product/kathai-solli-eli/ https://thamizhbooks.com/product/uyara-parantha-meengal/ https://www.commonfolks.in/books/d/kathaisolli-eli https://siruvarbooks.com/products/kathai-solli-eli https://aruvibooks.com/products/kathai-solli-eli

Tamil kids story

படம்
#நூல்அறிமுகம்! வித்தை_செய்யும்_நத்தை ! Ramya Storyteller  குழந்தைகளிடம் குழந்தையாகப் பழகும் கன்னிக்கோவில் இராஜா அவர்களின் மற்றுமொரு சிறுகதை தொகுப்பு! குழந்தைகள் விரும்பும் வண்ணம் எட்டு சிறுகதைகளும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. கதைகளுக்கேற்ற ஓவியங்களும் அருமை!        புத்தகத்தின் மற்றும் ஒரு சிறப்பம்சம் குழந்தைகள் கதைகளை காணொலியிலும் கண்டு மகிழ QR CODE இணைக்கப்பட்டுள்ளது. காணொளியின் வழியே சிறப்பாக கதை சொல்லி இருக்கிறார் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி! 1. குருவி_சொன்ன_ரகசியம் மனிதர்களின் தொந்தரவால் வேற்று மரத்துக்கு மாறிப்போன அணில்களை மீண்டும் வரவழைக்க இரட்டை வால் குருவி சொன்ன ரகசியம் முதல் கதை! 2. # ஆதிராவின்_ஷூ அன்பான சுட்டிப்பெண் ஆதிரா தொலைந்து போன தன்னுடைய ஒற்றை ஷூ வை செல்ல குட்டி மியாவிடம் இருந்து எப்படி மீட்கிறாள் என்று சொல்கிற கதை! 3. # மகிழ்ச்சி_பரவட்டும் விலங்குகள் பறவைகளுக்கு மட்டுமின்றி நத்தைகளுக்கும் மகிழ்ச்சி பரவிய கதையை கூறுகிறது. 4. # ஏழாம்_மாடிப்_புறா அம்மாவின் எச்சரிக்கையை மீறி பறக்க முயற்சித்த புறாக் குஞ்சு ஆபத்தில் மாட்டிக் கொள்வதும்...

Rochester Hills Public Library America

படம்
" அமெரிக்க_நூலகத்தில்* *நூலேணி பதிப்பகம் Lollipop Children's World பதிப்பக_நூல்கள்* அமெரிக்காவில் வசிக்கும் *கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி * Nellai Anbudan Ananthi அவர்கள், *ராச்செஸ்டர் பொதுநூலகத்தில்* தனது நூல்களையும், சக படைப்பாளர்களின் நூல்களையும் எப்போதும் கொண்டுபோய் சேர்ப்பவர். இந்த வருடம் 42 நூல்களை அளித்திருக்கிறார். அதில் * நூலேணி பதிப்பகம் Nooleni publications*  தொகுத்த ஹைக்கூ, லிமரைக்கூ, புதுக்கவிதை மற்றும் திருக்குறள் சார்ந்த கவிதை நூல்களும் அடங்கும். தொகுப்பில் கலந்து கொண்ட அனைத்து கவிஞர்களின் சார்பில் *கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி* அவர்களுக்கு வாழ்த்துகள்.

madras day

படம்
* சென்னை மற்றுமொரு அன்னை * தமிழ்நாட்டின் தலைநகராம் * சிங்கார சென்னைக்கு இனிய தாலாட்டு நாள் வாழ்த்துகள் * மண்ணின் மைந்தனாய் மகிழ்வடைகிறேன் #MadrasDay #சென்னைதினம்385 சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும் இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது * இன்று 2024ல் சென்னை தினத்திற்கு 385 வயது * புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டுவதற்காக பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியினர் இந்நாளிலேயே ஒரு சிறு காணியை வாங்கினர் கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் ஐயப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை * சென்னப்_நாயக்கர் * பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது என்கிறது வரலாறு.

Tamil Haiku new Activity

படம்
தமிழ்_ஹைக்கூ_உலகிற்கு_புதுசு 16 ஆண்டுகளுக்கு முன்னால் மின்மினி ஹைக்கூ இதழை நடத்தி வந்தேன். அதன் மூன்றாம் ஆண்டு கொண்டாட்டத்தில் அப்போது தமிழ்நாட்டில் மின்சார சிக்கல் இருந்தது. சென்னையில் நாள்தோறும் ஒரு மணி நேரம் மின்சாரம் தடைபடும். கை விசிறியில் ஹைக்கூ:   அதை கருத்தில் கொண்டு அனைவருக்கும் உறுதியான நெகிழி கைவிசிறி யை பரிசளிப்பது என்று முடிவு செய்து அதில் 20 கவிஞர்களின் ஹைக்கூக்களை அச்சிட்டு ஆண்டு விழாவில் அளித்தோம்.  அஞ்சல் அட்டையில் ஹைக்கூ_தொகுப்பு: அதேபோல ஒரே அஞ்சல்_அட்டையில் பலரின் கவிதைகளைப் பதிப்பித்து  ஹைக்கூ_தொகுப்பு ஒன்றை பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களோடு இணைந்து கொண்டு வந்தேன் இவை யாவும் தமிழ் ஹைக்கூ உலகிற்கு புதிய விடயங்கள். இப்போது ஹைக்கூவை ஆராதிக்கும் எழுத்தாளர்களுக்கு தெரிவிப்பதற்கான வாய்ப்பாக இந்த படங்கள் அமைந்துள்ளன.

imarbun

படம்
லிமர்புன் கவிதைகள் குறித்து எழுத்தாளர் பொன். குமார் அவர்களின் பதிவு (முழு கட்டுரையிலிருந்து சிறு பகுதி)

cheguvera

படம்
#இந்த_வாரத்தில்_வடிவமைத்த_நூல் வெறுங்கை என்பது மூடத்தனம்-உன்  விரல்கள் பத்தும் மூலதனம்  கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும் - உன்  கைகளில் பூமி சுழன்று வரும் என்று எழுதிய கவிஞாயிறு தாராபாரதி அவர்களின் சகோதரர் மலர்மகன் அவர்கள்  புதுகைத் தென்றல் இதழில் 18 மாதங்கள் எழுதிய செங்காற்று சேகுவேரா என்கிற நூலை வடிவமைத்து அச்சிட்டு தருகிற பணியை தந்திருந்தார். புதுக்கவிதையில் சேகுவேராவின் வாழ்க்கை வரலாறு திறம்பட எடுத்தியம்பப்பட்டிருக்கிறது  இந்த நூலுக்கு தோழர் இரா.நல்லகண்ணு அணிந்துரை நல்கியுளார்  ஆகஸ்டு 18, 2024 ஆம் ஆண்டு நூல் வெளியிடாகிறது. நூல் வடிவமைப்பு: Kannikovil Raja   மேற்பார்வை: Nellai Anbudan Ananthi பதிப்பகம்: இலக்கியவீதி

Tamil Haiku Book cover 05

படம்
ஹைக்கூவின் தந்தை மட்சுவோ பாஷோ அவர்களின் 380-ஆவது பிறந்த நாளில் படைப்பாளர்களின் நூல்களை நூலேணி பதிப்பகம் வெளியிட இருக்கிறது. அந்த வரிசையில்

Tamil Haiku Book

படம்
   ஹைக்கூவின் தந்தை மட்சுவோ பாஷோ அவர்களின் 380-ஆவது பிறந்த நாளில் படைப்பாளர்களின் நூல்களை நூலேணி பதிப்பகம் வெளியிட இருக்கிறது. அந்த வரிசையில்

Tamil Haiku book

படம்
  ஹைக்கூவின் தந்தை மட்சுவோ பாஷோ அவர்களின் 380-ஆவது பிறந்த நாளில் படைப்பாளர்களின் நூல்களை நூலேணி பதிப்பகம் வெளியிட இருக்கிறது. அந்த வரிசையில்

Tamil Senriu Book

படம்
ஹைக்கூவின் தந்தை மட்சுவோ பாஷோ அவர்களின் 380-ஆவது பிறந்த நாளில் படைப்பாளர்களின் நூல்களை நூலேணி பதிப்பகம் வெளியிட இருக்கிறது. அந்த வரிசையில்

Tamil Haiku book

படம்
  ஹைக்கூவின் தந்தை மட்சுவோ பாஷோ அவர்களின் 380-ஆவது பிறந்த நாளில் படைப்பாளர்களின் நூல்களை நூலேணி பதிப்பகம் வெளியிட இருக்கிறது. அந்த வரிசையில் சேலத்தில் இருந்து கவிஞர் #பொன்_குமார் அவர்களின் நூல்