#நெல்மரப்பறவை

 Ambigavathy Saravanan அவர்களின் பதிவு

(மீள்)



சிறுவர்களுக்கான சிறுகதை எழுத்தாளர் அவர்களை...
#வாசகசாலையின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவில் 30.12.2019 அன்றுதான் சந்தித்தேன்...
என்னுடைய உரையின் போது, "நாம் நம் குழந்தைகளுடன் உரையாடுவதற்கான அவசியத்தை, என் வகுப்பில் நடந்த #நெல்மணியைப் பார்த்திராத சென்னை மாணவர்களின் நிகழ்வு ஒன்றோடு ஒப்புமைப்படுத்திக் கூறினேன்.
சிறிது நேரத்திலேயே #நெல்மரப்பறவை
என்னும் தலைப்போடு வந்த இவ்வாசிரியர் "நீங்கள் சொன்ன ஒற்றைச் சொல்லில் உதித்தது என் அடுத்த சிறுகதைக்கான இந்த தலைப்பு"
என்று ஆச்சரியமூட்டினார்... என் பெயரையும், அலைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டு சென்றார். இரண்டு நாட்கள் கழித்து #நெல்மரப்பறவை என்னும் நூலுக்கு #அணிந்துரை எழுதித் தர முடியுமா என்றார்... நெகிழ்ச்சியாக இருந்தது எனக்கு...
#நெல்மரப்பறவையின் எச்சத்தில் தழைக்கட்டும் மானுட அறம்...
(கதையாளனான இவ்வாசிரியர் சிறுவர்களுக்கான சிறுகதைத் தொகுப்புகள் 40, சிறுவர் பாடல்கள் 5 நூல்கள், கட்டுரை, கவிதை என எல்லாத் தளங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்... இதழ்களிலும் எழுதி வருகிறார்...)

ஆசிரியருக்கு வாழ்த்தும் வணக்கமும்...



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nooleni Haiku competition 2025

Tamil Haiku new Activity

International haiku poetry day Nooleni Publications